திருமணம் ஆகி 10 நாள் தான் ஆகுது அதுக்குள்ள வாந்தி ஷாக்கில் புது மாப்பிள்ளை பதறவைக்கும் சம்பவம்..!

திருமணம் ஆகி 10 நாள் தான் ஆகுது அதுக்குள்ள வாந்தி ஷாக்கில் புது மாப்பிள்ளை பதறவைக்கும் சம்பவம்..! 


தனியார் வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக சேலத்தைச் சேர்ந்த சசிசேகர் (44) என்பவர், பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர். இதற்கு முன்னர் சேலத்தில் உள்ள மற்றொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிருந்த போது, அதே அலுவலகத்தில் பணியாற்றிய திருமணமாகாத இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகினார். 

இந்த நிலையில்  இளம்பெண் கடந்த ஜனவரியில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான 10 நாட்களுக்குள் வாந்தி எடுத்ததால் மருத்துவ பரிசோதனை செய்த போது, அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து கர்ப்பத்திற்கு காரணம் சசிசேகர் தான் என இளம்பெண் கணவரிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, புதுமாப்பிள்ளை தனது நண்பரான கோபாலை அழைத்து, சசிசேகரை சந்தித்து கருவை கலைக்க ரூ. 80 ஆயிரம் கேட்டு, அதை பெற்று மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தனர். 


இந்த விவகாரம் நிறைவடைந்ததாக நினைத்த சசிசேகருக்கு, பின்னர் கோபால் மீண்டும் பணம் கேட்கும் நோக்கத்தில் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் மோகன் (பாஸ்ட் புட் மோகன்), பூமாலை ராஜன், உலக நாதனை அழைத்து வந்து மிரட்டினர். அவர்கள் சசிசேகரிடம்,  “படங்களை வெளியிடுவோம், பொலிஸில் புகார் கொடுக்கிறோம் “ என மிரட்டி, மேலும் ரு.10 லட்சம் பணம் கேட்டனர். 

இதனால் பயந்த சசிசேகர் ரூ.09 லட்சம் பணம் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் மீண்டும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். இதனால் தாங்க முடியாமல் போன சசிசேகர், தான் ஏற்கனவே ரூ.9.80 லட்சம் அளித்திருப்பதாகவும், மேலும் பணம் கொடுக்க இயலாது எனவும் கூறினார். மிரட்டல்கள் தொடர்ந்ததால் அவர் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

சசிசேகர் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி கோபால், பாஸ்ட் புட் மோகன், பூமாலை ராஜன், உலக நாதன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், பொலிஸார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 4 பேரில் கோபாலைத் தவிர மற்ற மூவர் மீதும் ஏற்கனவே சேலம் டவுன் மற்றும் அழகாபுரம் காவல் நிலையங்களில் 5க்கும் மேற்பட்ட வழிப்பறி, மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post