அர்த்தம் வேலைத்திட்டம்: சிறுவர் மாதாந்த 5000 ரூபா உதவி – 2025

அர்த்தம் வேலைத்திட்டம்: சிறுவர் மாதாந்த 5000 ரூபா உதவி – 2025

அர்த்தம் வேலைத்திட்டம் 2025 – சிறுவர்களுக்கான மாதாந்திர 5000 ரூபா உதவித் தொகை அறிவிப்பு  இலங்கை அரசு அர்த்தம் வேலைத்திட்டம் – குழந்தைகள் நலத்திற்கான மாதாந்திர நிதி உதவி


நிறுவன பாதுகாப்பில் அல்லது பொறுப்பில் உள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோர சிறுவர்களுக்கு மாதாந்த உதவித் தொகை திட்டத்தை செயல்ப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இதன்படி குறித்த சிறுவர்களுக்கு 5000 ரூபாவை வழங்கும் திட்டத்தை செயற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அர்த்தம் என பெயரிடப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தின் கொடுப்பனவுகள் ஜூலை 2025 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான அர்த்தம் வேலைத்திட்டத்திற்கு. 2025 ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரம் மில்லியன் ரூபாவினை பிள்ளைகளின் உயரிய நலனுக்காக பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

2025 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த கொடுப்பனவுகளை வழங்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி அர்த்தம் வேலைத்திட்டத்தின் கொடுப்பனவுக்கான குறித்து ஆரம்பமாகும் திகதியை 2025.01.01 என கருதி இந்த திகதியிலிருந்து நிலுவையிலுள்ள கணக்குகளை அவர்களின் கணக்குகளில் வரவு வைக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்த்த முஉன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இது குறித்து முழு தகவல்களை பார்வையிட கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்து நீங்கள் பார்வையிட முடியும். 


Post a Comment

Previous Post Next Post